விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவிரி ஆற்றில் விநாடிக்‍கு 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவிரி ஆற்றில் விநாடிக்‍கு 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்‍கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் கோவில்கள், பொது இடங்கள் மற்றும் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஏதுவாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்‍கு 15 ஆயிரத்து 600 கனஅடி நீர்வரத்து உள்ளது. நேற்றைய தினம் முக்கொம்பு மேலணையில் இருந்து விநாடிக்‍கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விநாடிக்‍கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 600 கனஅடி தண்ணீர் கிளை வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டுள்ளது.

Night
Day