வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழா தொடக்கநாளை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. 

Night
Day