2-ம் ஆடி வெள்ளியையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அம்மன் ஆலயங்களில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆடி 2வது வெள்ளிக்கிழமையான இன்று சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பேருந்துகளிலும் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Night
Day