508 பால்குடம் ஊர்வலம், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்‍கடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற பால்குட ஊர்வலம், கொடியேற்றம் மற்றும் 
கி​ருத்திகை விழாக்‍களில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு
 508 பால்குடம் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரையில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் பால் குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்துக்‍கு பின்னர் முத்து மாரியம்மனுக்‍கு மங்கள வாத்தியங்கள் முழங்க  மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 

Night
Day