"அமலாக்கத்துறையினர் வருகைக்காக தேநீர், பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்" -ராகுல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அமலாக்கத்துறையினரின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். 

Night
Day