"ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் அக்னி பாத் திட்டம் ரத்து" - அகிலேஷ் யாதவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய கால ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம் என உறுதியளித்துள்ளார். மேலும் பழைய முறையில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறும் எனவும் பதிவிட்டுள்ளார். இதனிடையே அக்னிபாத் திட்டத்தில் பணிபுரியும், ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day