"ஆந்திராவை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன்" - சந்திரபாபு நாயுடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன் என அந்தமாநில முதலமைச்சர் 
சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார். ஆந்திர முதலமைச்சராக நேற்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, தன் குடும்பத்தினருடன் இன்று திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 
சந்திரபாபு நாயுடு, நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திராவை மாற்றுவேன் என்றும், 
மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 
திருப்பதி திருமலையில் மதமாற்றம் இனி ஒருபோதும் நடைபெறாது என்றும், திருமலையில் இருந்து ஊழல், முறைகேடுகளை களைய தொடங்கி இருப்பதாகவும் கூறினார். 

Night
Day