"சொந்த தொகுதியின் சுற்றுலாப் பயணிதான் ராகுல்காந்தி'' - பாஜக விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி இறந்தோர் வீடுகளுக்கு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி சென்ற நிலையில் அவரை, சொந்த தொகுதியின் சுற்றுலாப் பயணி என பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முரளிதரன், ராகுல் காந்தி அவரது சொந்தத் தொகுதிக்கே  சுற்றுலாப் பயணி போல் 6 மாதங்களுக்கு ஒரு முறைதான் செல்வார் என்றார். ஒரு வாரத்துக்கும் மேலாக மனித - விலங்கு மோதல்களை சந்தித்து வரும் தொகுதியின் பிரச்சினைகளை கவனிக்கக் கூட அவருக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை எனச் சாடினார். வயநாட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட இல்லை என்றும் அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இருப்பதை ராகுல் உறுதி செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Night
Day