"நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை" - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று கூறிய தர்மேந்திர பிரதான், நீட் தேர்வர்களை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day