"பாஜக தொண்டர்களின் அதீத நம்பிக்கைக்கு மக்கள் தடை போட்டுள்ளனர்" - ரத்தன் சாரிதா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதீத நம்பிக்கையில் இருந்த பாஜக தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் உண்மையை உணர்த்தியிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்த நிலையில், 240 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனை சுட்டிக்காட்டி, ஆர்.எஸ்.எஸின் ஆர்கனைசர் பத்திரிகையில் அதன் நிர்வாகி ரத்தன் சாரிதா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாஜக தொண்டர்களின் அதீத நம்பிக்கைக்கு மக்கள் தடை போட்டுள்ளதாகவும், மக்களின் குரலை அக்கட்சி கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day