"பொய் மட்டுமே பேசுகிறார் பிரதமர் மோடி" - ராகுல்காந்தி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றமாக இருந்தாலும் பொது மேடையாக இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது பொய் மட்டும்தான் என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சாடியுள்ளார்.

பிரதமர்  மோடி மக்களவையில் நேற்று முன்தினமும், மாநிலங்களவையில் நேற்றும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, தேர்தல் மேடையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற அவையாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அனைத்துமே பொய்களின் குவியல்தான் எனக் கூறியுள்ளார். பொதுமக்களின் ஒவ்வொரு கேள்வியும் பிரதமரை கோபப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள ராகுல், கோபம் அழிவுக்கு உத்தரவாதம், வளர்ச்சி அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

Night
Day