"வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது மத்திய அரசு" எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வாட்ஸ்ஆப் சேனலில் இந்தியில் பதிவிட்டுள்ள அவர், வரி பயங்கரவாதம் என்பது பாஜக-வின் ஆபத்தான முகம் என்று கூறியுள்ளார். இன்றைய இந்தியாவில் வரிச் சுமையானது நடுத்தர மக்களுடைய வருவானத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ராகுல் காந்தி, நடுத்தர மக்களின் வருமானம் அப்படியே உள்ள நிலையில், வருமான வரி மட்டும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய நண்பர்களின் செல்வத்தை அதிகரிக்கவும், பாதுகாக்கவும், இந்தியாவில் உள்ள நடுத்தர முதுகெலும்பை பிரதமர் மோடி உடைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Night
Day