"ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கான காரணங்களை தனது அரசு ஆழமாக ஆராயும்" - யோகி ஆதித்யநாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கான காரணங்களை தனது அரசு ஆழமாக ஆராயும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு விபத்தா அல்லது சதியா என்பதை மாநில அரசு ஆராயும் என்றும் சதி செய்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் அவர்களின் காயங்களை குணப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Night
Day