"10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியை யாராலும் குற்றம் சொல்ல முடியாது" - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் குற்றம் சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு ஏற்றதாக இருக்கிறது எனவும், காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ் என்ற அளவில் அந்த கட்சி இருப்பதாகவும் சாடினார். 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார்கள் எனவும், ஆனால் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் குற்றம் சொல்ல முடியாது எனவும் கூறினார். எதிர்வரும் மக்களவை தேர்தலில், பாஜகவை வெற்றி பெற செய்து, மீண்டும் மோடியின் தலைமையில் பாரதத்தை வல்லரசாகவும், உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும் என தெரிவித்தார். 

Night
Day