''மோடி, அமித்ஷா மீது நம்பிக்கை வைக்கவில்லை'' - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நிரூபிக்கும் சரியான சான்று என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடுமையான சூழல்களையும் முறியடித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலை வணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுவதாகவும் கார்கே பதிவிட்டுள்ளார்.

Night
Day