'அதீத நம்பிக்கையால் மக்களவைத் தேர்தலில் பாதிப்பு' - யோகி ஆதித்யநாத் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதீத நம்பிக்கையே மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தோ்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு வாக்குகள் கிடைத்துள்ளதால் தோற்றாலும் அவர்கள் குரலெழுப்புவதாகக் கூறினார். கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் வென்று உத்தரப்பிரதேசத்தில் எதிா்க்கட்சிகளுக்கு நெருக்கடி அளித்த நிலையில் இந்த முறை அதீத நம்பிக்கையால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். மாநிலத்தில் காலியாகவுள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் மற்றும் 2027 பேரவைத் தோ்தலில் வெற்றிபெற இன்றிலிருந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Night
Day