'இந்தியாவில் பாஜகவே மீண்டும் வெல்லும் என வெளிநாடுகளும் நம்புகின்றன' - பிரதமர் மோடி பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


இந்தியாவில் பாஜகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என வெளிநாடுகளும் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் மாநாட்டில் உரையாற்றிய அவர், மக்களவைத் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில் தனக்கு வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் ஏற்கனவே வந்துள்ளதாக கூறினார். இது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளதைக் காட்டுவதாக குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக வெல்ல நினைப்பது ஆட்சியை அனுபவிப்பதற்காக அல்ல என்றும் தேசத்திற்காக உழைக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Night
Day