'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்படும் நினைவுப்பரிசுகளை ஏலத்தில் விடுவது வழக்கம் என்றும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ‘நமாமி கங்கே’ முயற்சிக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கி விட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தங்களுக்கு சுவாரஸ்யம் தரும் நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day