'எம்.பி.க்கள் மைக்கின் ரிமோட் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை' - ஓம் பிர்லா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எம்.பி.க்கள் மைக்கின் ரிமோட் கன்ட்ரோல் தன்னிடம் இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவையில் பேசிய அவர், சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர் என்றார். யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம் என்றும் சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் சபாநாயகர் இருக்கையில் அமரும் நபரிடம் மைக்ரோபோனை ஆஃப் செய்யக்கூடிய ரிமோட் கன்ட்ரோல் கிடையாது எனத் தெரிவித்தார். இந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் இதுபோன்ற ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கூடாது என்றும் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

Night
Day