'கெஜ்ரிவால் கோ ஆசீர்வாத்' பிரச்சாரத்தை தொடங்கிய சுனிதா கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், தனது கணவருக்கு ஆதரவு கோரி, 'கெஜ்ரிவால் கோ ஆசீர்வாத்' என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டு, வரும் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கெஜ்ரிவாலுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கும் வகையில் 'கெஜ்ரிவால் கோ ஆசீர்வாத்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாகவும், அவரிடம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day