'பிரதமர் மோடி 22 நபர்களை மட்டுமே ராஜா - மகாராஜாக்களாக ஆக்கியுள்ளார்' : ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி 22 நபர்களை ராஜா மற்றும் மகாராஜாக்களாக ஆக்கியுள்ளதாகவும் அவர்களுக்கு அதானி, அம்பானி என வேறு வேறு பெயர்கள் உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

பீகாரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அந்த ராஜாக்களுக்காகேவே பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைப்பதாகவும் சாடினார்.  தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதானி பற்றி  மோடியிடம் கேள்வி கேட்கும்போது, பரமாத்மா மீது பழிபோடத்தான் தற்போது பரமாத்மா கதையை பிரதமர் கூறுவதாகவும் குற்றம் சாட்டினார். நீண்ட பேச்சுகளையும், நாட்டை பிளவுபடுத்துவதையும் நிறுத்திக் கொண்டு,முதலில், நாட்டின் இளைஞர்களுக்கு பாஜக அரசு கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பிரதமர் பேச வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார்.

Night
Day