அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் படுகாயம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், நவி மும்பை பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

Night
Day