அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்காச்சோளம், பருப்பு வகைகள், பருத்திக்கு MSP உத்தரவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்காச்சோளம், பருப்பு வகைகள், பருத்தி ஆகியவற்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
விவசாயிகளின் நலன் மற்றும் குறைந்து வரும் நீர்மட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றார்.  மோடி அரசு விவசாயிகளின் நலனுக்காக உறுதிபூண்டுள்ளது என்றும் இதனை உணர்ந்து, விவசாய சங்கங்களின் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்றும் ப்யூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

Night
Day