அடுத்த 7 நாட்களில் நாடு முழுவதும் CAA அமல்படுத்தப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்த சட்ட மசோதா அடுத்த 7 நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர், அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்கும் வகையில், CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாததால் சிஏஏக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், அடுத்த 7 நாட்களில் இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day