அநாகரிகமாக பேசிய செல்போன் கடை உரிமையாளர் - போலீசில் ஒப்படைத்த மாணவிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் அநாகரிகமாக பேசிய செல்போன் கடைக்காரரை மாணவிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அங்குள்ள திட்வானா நகர்  குச்சமான் பகுதியில் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக மாணவிகள் சிலர் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் தவறான முறையில் பேசிய கடை உரிமையாளர், ஐ லவ் யூ சொல்லுங்கள் பின்னர் ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கடைக்கு வெளியே அவரை இழுத்து வந்த சரமரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

varient
Night
Day