அந்தமானில் இயற்கை விவசாயம் - விருதுகளை குவிக்கும் பெண் விவசாயி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருதுபெற்ற கரூர் விவசாயி பெண்மணி, எந்த நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்தமானில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் கரூர் தாளப்பாடியை சேர்ந்த செல்லம்மாள், இயற்கை விவசாயத்திற்காக கடந்த மே மாதம் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். மேலும் பல்வேறு விருதுகளை பெற்றுவரும் செல்லம்மாள், இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில் பங்கேற்று தனது சொந்த ஊரான கரூர் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விவசாயிகள் எந்த நிலையிலும், விவசாயத்தை கைவிடக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.

Night
Day