அமலாக்கத்துறை பிடியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நில மோசடி வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பலமுறை சம்மன் அளித்தும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை  விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அனுப்பப்பட்ட மற்றொரு சம்மனில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி  டெல்லி இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Night
Day