அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட சம்மதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட போவதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்ற சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுட இணைந்து போட்டியிட சம்மதம் தெரிவித்தார். 

varient
Night
Day