அயோத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடுத்த 7 முதல் 10 நாள்களுக்குள் வரத் திட்டமிட்டிருக்கும் முக்கிய பிரமுகர்கள், தங்களது வருகை குறித்து மாநில அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு உத்தரப்பிரதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால் அரசு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அந்தவரிசையில் பக்தர்களுக்கான அனுமதி நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Night
Day