அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பில் பங்கேற்க அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பங்கேற்க வருமாறு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 2019-ம் ஆண்டில் ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச  நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் மற்றும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day