அரசியல் ஆதாயத்திற்கு இந்துக்களை பிரித்தாள காங்கிரஸ் விரும்புகிறது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் ஆதாயத்திற்கு இந்துக்களை பிரித்தாள காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக கூறினார். அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறுவது வரலாற்று சாதனை என்று குறிப்பிட்ட அவர், அரசியல் ஆதாயத்துக்கான இந்துக்களை எந்த வகையிலும் தீயில் எரியவைக்க காங்கிரஸ் விரும்புவதாக குற்றம் சாட்டினார். இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் இந்த பார்முலாவையே காங்கிரஸ் பின்பற்றுவதாக கூறிய பிரதமர் மோடி, ஒரு பிரிவு இந்துக்களை மற்றொரு பிரிவு இந்துக்களுடன் போராட வைப்பதே காங்கிரசின் கொள்கை என்றும் சாடினார்.

Night
Day