அரசு மருத்துவமனையில் நோயாளி சுட்டுக்கொலை; தப்பி ஓடிய இளைஞரை தேடும் பணி தீவிரம் !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜிடிபி அரசு மருத்துவமனையில் ரியாசுதீன் என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதிமுதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள 24-வது வார்டில் 18 வயது இளைஞர் ஒருவர் நுழைந்து ரியாசுதீனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.

varient
Night
Day