அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்‍கத்துறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்தார். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார். இதனிடையே, இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது. 

Night
Day