அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 16-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் மாதம் 16-ம் தேதி நேரில் ஆஜராக, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆஜரான கெஜ்ரிவால், 
டெல்லி சட்டசபையில் இன்று அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். கெஜ்ரிவாலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Night
Day