அரியானா: பிரபல உணவகத்தில் உணவு சாப்பிட்ட 5 பேருக்கு ரத்த வாந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியான மாநிலத்தில் பிரபல உணவகத்தில் உணவு சாப்பிட்ட 5 பேர் திடீரென ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் தேதி அரியானா குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நண்பர்கள் 5 பேர் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் உணவை சாப்பிட்ட பிறகு அங்கிருந்த மவுத் ப்ரெஷ்னரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்திய சில நிமிடங்களில் 5 பேரும் அடுத்தடுத்து திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day