ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும் - ரேவந்த் ரெட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் ஏரிகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சுற்றுச்சூழலை நாம் சீர்குலைத்தால், இயற்கை வாயிலாக அவை நமக்கு பதிலடி கொடுக்கும் எனவும், ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநில அரசு தயங்காது என்றும் கூறினார். 

Night
Day