ஆச்சார்யா மராத்தே கல்லூரியில் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆச்சார்யா மராத்தே கல்லூரியில் மாணவர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செம்பூரில் இயங்கி வரும் ஆச்சார்யா மராத்தே கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய ஆடை கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிழிந்த ஜீன்ஸ், டி-சர்ட்கள் மற்றும் ஜெர்சிகளை அணிய கூடாது என்று தெரிவித்துள்ளது. மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும்போது முறையான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், மதம் அல்லது கலாச்சார வேறுபாட்டை காட்டும் எந்த உடையையும் மாணவர்கள் அணிய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Night
Day