ஆந்திராவில் அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். கடப்பாவில் இருந்து புலிவெந்துலா நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேருக்கு கவலைப்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

Night
Day