ஆந்திராவில் தேர்தலை ஒட்டி துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் திருப்பதியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்‍களவை 
தேர்தலை ஒட்டி நகரின் முக்கிய வீதிகளில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆந்திராவில் விரைவில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு நாளை பிற்பகல் 3 மணிக்‍கு வெளியாகிறது. இந்நிலையில் தேர்தலை பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் அமைதியாக நடத்த வசதியாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மாவட்டத்திற்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் பல இடங்களில் அணிவகுப்பு நடத்தினர்.

Night
Day