ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 5ம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளன்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு பின் ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழக எல்லையோரம் ஆந்திர கிராமங்களில் பதுங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், சுரேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது மனைவி பொற்கொடி போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்த போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி ஆலோசனையில் பங்கேற்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day