ஆந்திராவில் பாய்லர் வெடித்து விபத்து - 17 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள எசியன்டியா மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளையில் பெரும்பாலான தொழிலாளர்கள் உணவருந்த சென்று இருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதால், பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால் விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது அணு உலை வெடித்ததால் நிகழ்ந்ததல்ல என மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் தெரிவித்தார்.

Night
Day