ஆந்திராவுக்கு இன்றும், நாளையும் சிவப்பு நிற எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலத்திற்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு ஒடிசா - மேற்கு வங்கக்கடல் நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, ஆந்திராவுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து நாகை, எண்ணூா், புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Night
Day