ஆந்திரா, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததுள்ளது. 

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரை பூரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் உட்புற கர்நாடகா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day