ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் பார்வையிட உள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழையால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாவட்டத்திலும் நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து, 2 நாட்கள் பயணமாக ஆந்திரா, தெலங்கானாவுக்‍கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று செல்கிறார். அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார். கம்மம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ள மத்திய அமைச்சர் ஹைதராபாத்தில் இன்று மாலை அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Night
Day