ஆந்திரா : 'ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5,000 வழங்கப்படும்' - காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் ஏழைக்குடும்பங்களுக்கு வருமான ஆதரவு திட்டம் என்ற பெயரில் மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசியச் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திராம்மா வருமான ஆதரவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் என்பது ஆந்திர மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் என்றார். இது மோடி வழங்கும் பொய்யான உத்தரவாதம் அல்ல என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே மோடியின் உத்தரவாதமான ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் ஆகியவை நிறைவேறி விட்டதா என்றும் கார்கே கேள்வி எழுப்பினார்.

Night
Day