ஆந்திரா : சந்திரபாபு நாயுடு மீதும் கல்வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலத்தில் நேற்றுமுன் தினம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்ட நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடாவின் கஜுகாவா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு மீது கூட்டத்தில் இருந்து சிலர் திடீரென கற்களை வீசினர். இதில் நல்வாய்ப்பாக அவர் மீது கற்கள் படவில்லை. இதனிடையே கற்களை வீசியவர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சந்திரபாயு நாயுடு, போலீசார் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். தலைவர்கள் மீது கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்வது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day