ஆந்திரா : தவிடு மூட்டைகளுடன் ரூ.7 கோடி கடத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அதில் எடுத்துச்செல்லப்பட்ட பணப்பெட்டிகள் சாலையில் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே மினி லாரி மீது பெரிய லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கவிழ்ந்த மினி லாரியில் இருந்து, ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட பணப்பெட்டிகள் சாலையில் சிதறின. பணப்பெட்டிகளில் இருந்த 7 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day