ஆந்திரா : வாக்குச்சாவடிக்குள் மாறி மாறி அறைந்து கொண்ட எம்எல்ஏ, - வாக்காளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலின் போது, தன்னை அறைந்த எம்எல்ஏவை பதிலுக்கு வாக்காளரும் திருப்பி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான சிவக்குமார் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத்தேர்தலும் நடைபெற்றுவரும் நிலையில் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி ஒன்றுக்கு சென்ற எம்எல்ஏ சிவகுமாருக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த வாக்காளர் ஒருவரை சிவக்குமார் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாக்காளர் எம்எல்ஏ என்றும் பார்க்காமல் பளார் என சிவக்குமாரின் கண்ணத்தில் அறை விட்டார். இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தெனாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day