ஆந்திரா : YSR காங்கிரசின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அனந்தபூர் மாவட்ட பொதுக் கூட்டத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சித்தம் என்ற பெயரில் தொடர் அரசியல் கூட்டங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கியுள்ளார். அந்தவகையில் ராப்தாடு என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்தான் பத்து லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் திரண்டனர். கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன், வரவிருக்கும் தேர்தல்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, சித்தாந்தங்களின் போர் என்றார். அதில்அமோக வெற்றிபெற தொண்டர்கள் முழு ராணுவமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Night
Day