ஆந்திரா: கடல்பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 'மிலன்-2024' பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை பல்வேறு நாடுகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது. 12வது முறையாக நடக்கும் 'மிலன்-2024' பயிற்சியை முன்னிட்டு கடற்படை பயிற்சியில், ஹெலிக்காப்டர்கள் கடற்பகுதியில், மிகத் தாழ்வாக பறப்பது உள்ளிட்ட சாகசம் நிகழ்த்தின. இதில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வங்கதேசம், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றன. ஒரே எண்ணம் கொண்ட நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், இந்தியாவின் விக்ரம், விக்ரமாதித்யா கப்பல்கள், எம்.ஐ.ஜி. 29கே உள்பட 50க்கும் மேற்பட்ட வான்வழி வாகனங்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

Night
Day